கோவை சிங்காநல்லூரில் உள்ள பெரியார் நகரில் கடந்த 3 மாதங்களாக குப்பைகளை சரிவர அகற்றுவது இல்லை. இதனால் ஆங்காங்கே குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. இதன் காரணமாக கடும் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. வீடுகளில் புழுக்கள் ஊர்ந்து வருகிறது. இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் காணப்படுகிறது. எனவே குப்பைகளை அகற்றி மீண்டும் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.