பழனி நகர் பகுதியில் உள்ள சாக்கடை கால்வாய்கள் முறையாக தூர்வாரப்படுவதில்லை. இதனால் சாக்கடைகளில் கழிவுநீர் தேங்கியுள்ளது. குறிப்பாக பிளாஸ்டிக் குப்பைகள் தேங்கி கிடப்பதால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் கொசுக்கள் பெருகி மக்களுக்கு நோய் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே நகராட்சி நிர்வாகம் சாக்கடை கால்வாய்களை தூர்வாரி குப்பைகளை முறையாக அப்புறப்படுத்த வேண்டும். அதோடு நகரில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.