மதுரை பொதும்பு கிராமத்தில் அமைந்துள்ள பெரிய கண்மாய் அருகில் குப்பைகள் அதிகளவில் கொட்டப்படுகிறது. இதனால் நீர்நிலைகள் முற்றிலுமாக மாசடைவதுடன், சுகாதார கேடும் ஏற்படுகிறது. ஆங்காங்கே குப்பைகளில் தீ வைத்து எரிக்கின்றனர். இதனால் அப்பகுதியில் புகை காற்றில் கலந்து சுற்றுச்சூழலையும் மாசடைய செய்கிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.