குள்ளஞ்சாவடி அருகே அகரம் ஊராட்சி பெருமாள் ஏரிக்கரை சாலையோரம் குப்பைகள் அதிகளவில் கொட்டப்படுகிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதால் அவ்வழியே செல்லும் பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே குப்பைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.