திருப்பூர் கே.செட்டிப்பாளையத்தில் இருந்து வீரபாண்டி செல்லும் சாலையில் பஸ் நிறுத்தம் மற்றும் அம்மன் கோவில் பகுதியில் குப்பைகள் மலைபோல் குவித்து வைக்கப்பட்டு உள்ளது. சாலையோரமாக நீண்ட தொலைவில் குப்பைகள் குவிந்து கிடப்பதால் அங்கு ஏராளமான தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன். இந்த நாய்கள் இரவு நேரத்தில் பணிமுடிந்து இருசக்கர வாகனத்தில் செல்பவர்களை விரட்டுகிறது. இதனால் அவர்கள் நிலைதடுமாறி கீேழ விழ வாய்ப்பு உள்ளது. மேலும் குப்பைகளில் துர்நாற்றம் வீசுவதால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற முன்வர வேண்டும்.
காவ்யா, கே.செட்டிப்பாளையம்.