திருவள்ளூர் மாவட்டம், திருவேற்காடு மூகாம்பிகை நகர், தேவி நகர் பகுதியில் உள்ள தெருவில் சாலை ஓரத்தில் குப்பைகள் கொட்டப்படுகிறது. சாலைகளில் சிதறி கிடக்கும் குப்பைகள் அந்த வழியாக செல்பவர்களுக்கு இடையூறாகவும், சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துவதாகவும் உள்ளது. மேலும், பயங்கர துர்நாற்றம் வீசுவதால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, மாநகராட்சி அதிகாரிகள் குப்பைகளை சுத்தம் செய்ய உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும்.