திண்டுக்கல் அனுமந்தநகரில் சாலையோரத்தில் குப்பைகள், பிளாஸ்டிக், உணவுப்பொருள் கழிவுகள் கொட்டி வைக்கப்பட்டுள்ளன. அவற்றை அந்த வழியாக செல்லும் மாடுகள் மேய்கின்றன. இதன் காரணமாக மாடுகளுக்கு நோய் பாதிப்பு ஏற்படும் அபாயம் இருப்பதோடு, சுகாதாரக்கேடும் ஏற்பட்டுள்ளது. எனவே குப்பைக்கழிவுகளை விரைந்து அகற்ற வேண்டும்.