குப்பை கிடங்கால் மக்கள் பாதிப்பு

Update: 2025-06-08 09:46 GMT

கரூர் மாவட்டம், பள்ளப்பட்டி தெற்கு தெருவில் நகராட்சி குப்பை கிடங்கு உள்ளது. இங்கு கொட்டி வைக்கப்படும் குப்பை கழிவுகளால் இப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் இப்பகுதியில் குடியிருப்போர் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். சில நேரங்களில் மர்ம மனிதர்கள் குப்பை கிடங்கை தீ வைத்து விட்டு சென்று விடுகின்றனர். இதனால் இந்த பகுதியில் அதிக அளவு அவ்வப்போது புகைமூட்டமும் ஏற்படுவதால் முதியவர்கள், குழந்தைகள் மூச்சுத்திணரால் பாதிக்கப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்