கோத்தகிரி இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் குஞ்சப்பனை காட்சி முனை அமைந்துள்ளது. இந்த காட்சி முனை பகுதியில் ஏராளமான குப்பைகள் கொட்டப்பட்டு, அகற்றப்படாமல் கிடக்கிறது. இதனால் வனவிலங்குகள் குப்பைகளில் உள்ள கழிவுகளை தின்னும் நிலை உள்ளது. இதன் காரணமாக அவற்றின் உடல் நிலை பாதிக்கப்படும். அத்துடன் சுகாதார சீர்கேடும் ஏற்பட்டு வருகிறது. எனவே குப்பைகளை உடனடியாக அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மீண்டும் கொட்டாமல் தடுக்க முன்வர வேண்டும்.