குவிந்து கிடக்கும் குப்பைகள்

Update: 2025-06-01 14:38 GMT

கரூர் காதப்பாறை ஊராட்சி, வெண்ணெய்மலை ரெயில்வே பாலத்திற்கு செல்லும் மெயின் சாலையின் ஓரத்தில் ஏராளமான குப்பைகள் கொட்டப்பட்டு உள்ளது. இந்த குப்பைகள் பலத்த காற்று அடிக்கும்போது சாலைகளில் பறந்து செல்வதினால் இரு சக்கர வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் இப்பகுதியில் மழை பெய்யும்போது குப்பைகளில் மழைநீர் தேங்கிய கடும் துர்நாற்றம் வீசுவதுடன், இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்