காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர், சாந்தி நகர் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் மிக மோசமான நிலைமையில் இறைச்சியின் கழிவுகள் மற்றும் சாணம் கொட்டப்படுகிறது. இதனால், இந்த பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும், தொற்று நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே, பொதுமக்களின் நலன் கருதி நகராட்சி அதிகாரிகள் இறைச்சி கழிவுகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.