பழனி ஊராட்சி ஒன்றியம் சிவகிரிப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட வள்ளிநகர், ராமநாதன்நகர் பகுதிகளில் முறையாக குப்பைகள் அள்ளப்படுவதில்லை. இந்த குடியிருப்பு பகுதிகள் பழனி நகரை ஒட்டி அமைந்துள்ளதால் வெளியூரில் இருந்து வரும் பக்தர்களும் கடும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். அதாவது குப்பைகள் தேங்கி அதிலிருந்து துர்நாற்றம் வீசுவதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதேபோல் ஊராட்சியில் உள்ள திருநகர், சேரன்ஜீவாநகர், நேதாஜிநகர், புதுநகர், தட்டான்குளம் என அனைத்து பகுதிகளிலுமே குப்பைகள் அள்ளப்படுவதில்லை. இதனால் மக்கள் கடும் இன்னல்களுக்கு ஆளாகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் உரிய தலையிட்டு மக்களின் சுகாதாரத்துக்கு உரிய வழிவகை செய்ய குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.