நெல்லையை அடுத்த நாரணம்மாள்புரம் பேரூராட்சி கரையிருப்பு- குறிச்சிகுளம் சாலையில் அரசு விதைப்பண்ணை அருகில் சாலையோரம் குப்பைக்கூளமாக கிடக்கிறது. அவைகள் காற்றில் பறந்து சாலை முழுவதும் சிதறி கிடப்பதால் சுகாதாரக்கேடாக உள்ளது. எனவே அங்கு குப்பைத்தொட்டி வைத்து, குப்பைகளை தினமும் அகற்றுவதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.