உடுமலை அரசு ஆஸ்பத்திரி குப்பைகள் மூட்டை மூட்டையாக கட்டப்பட்டு ஆஸ்பத்திரி வளாகத்தின் ஒரு பகுதியில் போடப்பட்டுள்ளது. அதிலிருந்து கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் சுகாதார சீர்கேடு நிலவுகிறது. எனவே குப்பை கழிவுகளை முழுமையாக அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.