கரூர் காதப்பாறை ஊராட்சி, வெண்ணெய்மலை பகுதியில் ஏராளமான குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் இப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், பலத்த காற்று அடிக்கும்போது இந்த குப்பைகள் சாலைகளில் பறந்து விழுகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.