அரியலூர் மாவட்டம் அஸ்தினாபுரம் கிராமத்தில் அரசு மாதிரி பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளி வளாகத்தின் சுற்றுச்சுவர் அருகே பொதுமக்கள் குப்பைகளை கொட்டி வந்ததால், குப்பைகள் மலை போல் குவிந்து கிடந்தன. மேலும் இதனை அப்பகுதியை சேர்ந்தவர்கள் தீயிட்டு கொளுத்துவதால் பள்ளியில் பயிலும் மாணவ-மாணவிகளும், பொதுமக்களும் அவதியடைந்து வருவதாக கடந்த வாரம் தினத்தந்தி நாளிதழில் வெளியான புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை கருத்தில் கொண்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுதொடர்பாக நடவடிக்கை மேற்கொண்டு குப்பைகளை முழுவதுமாக அப்புறப்படுத்தினர். இதனால் செய்தி வெளியிட்ட தினத்தந்தி நாளிதழுக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.