இறைச்சி கழிவுகளால் துர்நாற்றம்

Update: 2025-04-27 09:05 GMT

கணக்கம்பாளையம் ஊராட்சி அய்யம்பாளையத்தில் இருந்து பொங்குபாளையம் செல்லும் சாலையோரத்தில் அதிக அளவில் குப்பைகள், இறைச்சி கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே அந்த இடத்தில் குப்பைகள் கொட்ட வேண்டாம் என்று ஊராட்சி நிர்வாகம் பதாகை வைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மேலும் செய்திகள்