அரியலூர் மாவட்டம் அஸ்தினாபுரம் கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், இங்குள்ள அரசு மாதிரி பள்ளி வளாகத்தின் சுற்றுச்சுவர் அருகே அதிகளவில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன. இதனால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. மேலும், துர்நாற்றம் வீசி வருவதால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பலரும் அவதியடைந்து வருகின்றனர். சுத்தமாக வைத்திருக்க வேண்டிய பள்ளி வளாகத்தின் அருகில் இந்த குப்பைகளை தீயிட்டு கொளுத்துவதாலும் பலர் அவதியடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுதொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.