பொதுமக்கள் அவதி

Update: 2025-03-30 14:15 GMT

செங்கல்பட்டு மாவட்டம், நொய்குப்பி பஞ்சாயத்திற்குட்பட்ட நரசங்குப்பம் பகுதியில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். நெய்குப்பி பகுதியில் உள்ள குப்பைகள் நரசங்குப்பம் பகுதியில் உள்ள ஏரி அருகில் கொட்டப்பட்டு, தீ வைக்கப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மிகவும் அவதி அடைகின்றனர். இதுகுறித்து கடந்த சில வருடங்களாக ஊரகவளர்ச்சி துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் பலர் நோய்வாய் பட்டு சிகிச்சை பெறும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, ஊரகவளர்ச்சி துறை உயர் அதிகாரிகள் இதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்