சென்னை அடையாறு, காந்தி நகர் முதல் மெயின் ரோட்டில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள குப்பை தொட்டிகளில் அகற்றப்படாமல் குப்பை குவிந்து கிடக்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு மற்றும் நோய் தொற்று பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. மேலும், சாலையில் செல்லும் போது குப்பைகளால் அதிக அளவு துர்நாற்றம் வீசுகிறது. எனவே, மாநகராட்சி அதிகாரிகள் குப்பையை அகற்ற உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.