இரும்பாலையில் இருந்து கொல்லப்பட்டி செல்லும் வழியில் சாலையோரம் குப்பைகள் கொட்டப்பட்டுள்ளன. குறிப்பாக மருத்துவ கழிவுகள் அதிகப்படியாக இங்கு வீசப்படுகிறது. இதனால் காற்று, நிலம் மாசடைந்து நோய் பரவும் அபாயம் உள்ளது. வாகன ஓட்டிகள் இந்த பகுதியை கடந்து செல்லும்போது மூக்கை பிடித்தபடி செல்கின்றனர். எனவே அதிகாரிகள் இந்த பகுதியில் குப்பைகளை கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.