குப்பைகளால் துர்நாற்றம்

Update: 2025-03-23 12:11 GMT

காஞ்சீபுரம் மாவட்டம், மாங்காடு நகராட்சி எல்லைக்குட்பட்ட பட்டூர், பாத்திமா நகர், இஷாக் நகர் ஆகிய பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றார்கள். இந்தப் பகுதிகளில் உள்ள முக்கிய சாலை அருகில் சிலர் குப்பைகளை கொட்டி வருகிறார்கள். இதனால் சுகாதார சீர்கேடு மற்றும் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும், அந்த பகுதி வழியாக செல்லும்போது அதிகஅளவு துர்நாற்றம் வீசுகின்றது. எனவே, மாங்காடு நகராட்சி நிர்வாகம் குப்பையை உடனே அகற்றவும், குப்பை கொட்டுவதை தடுக்கவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்