திருவள்ளூர் மாவட்டம் திருப்பாச்சூர் பெரிய காலனிக்கு செல்லும் வழியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் மர்மநபர்கள் சிலர் குப்பைகளை கொட்டி வருகின்றனர். இதனால் சுகாதார சீர்கேடு மற்றும் நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. மேலும். சாலையில் செல்லும் போது குப்பைகளால் துர்நாற்றம் வீசுகிறது. எனவே ஊராட்சி நிர்வாகம் குப்பையை அகற்ற உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.