கோவையை அடுத்த காளப்பட்டி அருகே சந்திரா கார்டன் உள்ளிட்ட பகுதிகளில் சாலையோரங்களில் குப்பைகள் அதிகளவில் கொட்டப்படுகிறது. இதன் காரணமாக அங்கு குப்பைகள் குவிந்து கிடக்கிறது. அதில் இருந்து கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அங்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. மேலும் தொற்று நோய் பரவும் அபாயமும் காணப்படுகிறது. எனவே அங்கு குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.