பண்ருட்டி அருகே எல்.என்.புரம் ஊராட்சியில் குப்பைகளை சேகரிக்க பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் பழுதடைந்தது. அதனை சீரமைத்து மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதன் காரணமாக அந்த வாகனங்கள் மேலும் சேதமடைந்து வீணாகும் நிலை உருவாகி உள்ளது. இதை தவிர்க்க அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.