குப்பைகளை எரிப்பதால் பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல்
திருவேங்கடத்தில் மக்கள் குடியிருக்கும் பகுதியில் சிலர் குப்பைகளை கொட்டி தீ வைத்து எரிக்கின்றனர். இதனால் பொதுமக்கள் மூச்சுத்திணறலால் அவதிப்படுகின்றனர். மேலும் சுகாதாரக்கேடாகவும் உள்ளது. இதனை சரிசெய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.