காஞ்சீபுரம் மாவட்டம், சிக்கராயபுரம் பொன்னியம்மன் நகரில் சாலையின் அருகில் குப்பைகள் மலைபோல குவிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிக அளவு துர்நாற்றம் வீசுகிறது. குப்பைகள் கிடக்கும் பகுதியில் அதிக தெருநாய்களும் சுற்றித்திரிகிறது. இதனால் அந்த பகுதியை கடந்து செல்லும் மாணவ- மாணவியர் மற்றும் வாகன ஓட்டிகள் அச்சத்துடனே கடந்து செல்கின்றனர். மேலும், கடந்த 5 ஆண்டுகளாக குப்பைகள் அகற்றப்படாமல் அப்படியே உள்ளது. இதுகுறித்து புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகள் குப்பைகளை அகற்றவும், குப்பை கொட்டுவதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.