தேங்கி கிடக்கும் குப்பை

Update: 2024-09-15 17:39 GMT

சூளகிரி-கிருஷ்ணகிரி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சர்வீஸ் சாலை உள்ளது. இந்த சாலை ஓரத்தில் குப்பைகள் அதிக அளவில் கொட்டப்படுகின்றன. இதனால் அந்த பகுதி முழுவதும் கடுமையான துர்நாற்றம் வீசுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. எனவே தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் தேங்கிக்கிடக்கும் குப்பைகளை அகற்றிட வேண்டும். மேலும் அந்த பகுதியில் குப்பைகள் கொட்டாமல் இருக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா?

-முனிராஜ், சூளகிரி.

மேலும் செய்திகள்