குப்பைகளால் சுகாதார சீர்கேடு

Update: 2024-09-15 14:20 GMT

அரியலூர் பழைய அரசு மருத்துவமனை வளாகத்தின் அருகே அதிகளவில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன. மேலும் சாலையோரம் உள்ள கழிவுநீர் வாய்க்காலிலும் இந்த குப்பைகள் அதிகளவில் தேங்கியுள்ளதால் துர்நாற்றம் வீசி வருகிறது. இந்த குப்பைக்கூழங்களில் நாய்கள் மற்றும் கால்நடைகள் உழன்று சுகாதார சீர்கேடை ஏற்படுத்தி வருகின்றன. இதனால் பொதுமக்களுக்கு நோய்த்தொற்று பரவ வாய்ப்புள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுதொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுத்து நோய்த்தொற்று பரவலை தடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்