குப்பைகள் அகற்றப்படுமா?

Update: 2024-09-15 12:13 GMT

செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் 34-வது வார்டு, கண்ணம்மாள் குறுக்கு தெருவில் சாலை அருகில் குப்பைகள் கொட்டப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதி வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதி அடைகின்றனர். மேலும், குப்பைகள் கொட்டப்பட்டுள்ள பகுதியில் வீடுகள் இருப்பதால், அதிக அளவு துர்நாற்றம் வீசுகிறது. நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சாலை அருகில் உள்ள குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்