குப்பைகளால் மாணவ, மாணவிகள் அவதி

Update: 2024-09-01 17:33 GMT

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பருவதனஅள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட கல்விபுரத்தில் அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 50-க்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளி அருகே சிலர் குப்பைகளை கொட்டி செல்கின்றனர். மேலும் அந்த குப்பைகளை தீ வைத்து எரிக்கின்றனர். இதனால் பள்ளி மாணவ, மாணவிகள் சுவாச பிரச்சினை, கண் எரிச்சல் ஆகியவற்றால் அவதிப்படுகின்றனர். எனவே ஊராட்சி நிர்வாகம் உடனடியாக அந்த பகுதியில் குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மாதப்பன், பென்னாகரம்.

மேலும் செய்திகள்