குவிந்து கிடக்கும் குப்பைகள்

Update: 2024-09-01 11:47 GMT
கரூர் மாவட்டம் வெண்ணெய்மலை ரெயில்வே பாலத்தின் அருகே சாலையோரத்தில் குப்பைகள் மலைப்போல் குவிந்து கிடக்கிறது. தற்போது அவ்வபோது மழை பெய்து வருதால் குப்பையில் தண்ணீர் தேங்கி நின்று துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மூக்கை பிடித்து கொண்டு செல்கின்றனர். மேலும் குப்பை காற்றில் பறந்து சாலையில் வந்து விழுகிறது. எனவே அந்த குப்பையை சுத்தம் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.

மேலும் செய்திகள்