சாலையோரம் கொட்டப்படும் குப்பைகள்

Update: 2024-09-01 10:05 GMT

திருப்பூர் பொங்குபாளையத்திலிருந்து அய்யம்பாளையம் செல்லும் சாலையோரம் குப்பைகள் மற்றும் கோழி கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது. அந்த வழியே பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். கோழி கழிவுகள் கொட்டப்படுவதால் அந்த பகுதியை சுற்றி துர்நாற்றம் வீசி வருகிறது. அந்த பகுதியில் குப்பைகள் மற்றும் கோழி கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளி மாணவ-மாணவிகள் எந்த சிரமமும் இன்றி அந்த வழியே சென்றுவர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்