குப்பை கிடங்காக மாறிவரும் புறவழிச்சாலை

Update: 2024-08-25 10:04 GMT

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை புறவழிச்சாலையில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. சாலையில் பாதிப்பகுதியை குப்பைகள் ஆக்கிரமித்துள்ளன. குப்பைகளில் இரை தேடி பன்றிகள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. குவிந்து கிடக்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. பன்றிகள் சாலையில் அங்கும்,இங்கும் ஓடுவதால் வாகன ஓட்டிகளும் விபத்தில் சிக்கிக்கொள்கின்றனர்.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்