நோய் தொற்று பரவும் அபாயம்

Update: 2024-08-18 14:50 GMT

கரூர் மாவட்டம் புகழூர் அருகே சேலம் -கரூர் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் உள்ள டாஸ்மாக் கடை அருகே தார் சாலை ஓரத்தில் ஏராளமான பிளாஸ்டிக் கழிவுகள், அழுகிய காய்கறிகள், மருத்துவ கழிவுகள் உள்ளிட்டவை கொட்டப்பட்டு வருகிறது. இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்