நடவடிக்கை தேவை

Update: 2024-08-18 07:37 GMT

பள்ளந்துறை ஊராட்சிக்கு உட்பட்ட சங்குத்துறை கடற்கரை பகுதி உள்ளது. இங்கு வார விடுமுறை நாட்களில் ஏராளமான பொதுமக்கள் வந்து கடல் அழகை ரசித்து பொழுதை கழித்து விட்டு செல்கின்றனர். ஆனால், கடற்கரையில் ஆங்காங்கே குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கி கிடக்கின்றன. இதனால், அங்கு வரும் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாவதுடன், குப்பைகள் காற்றின் வேகத்தில் அலையில் அடித்துச் செல்லப்பட்டு கடல்நீர் மாசடைய வாய்ப்புகள் உள்ளன. எனவே, குப்பைகளை அகற்றிட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராம், மேலகிருஷ்ணன்புதுர்.

மேலும் செய்திகள்