குப்பைகளால் சுகாதார சீர்கேடு

Update: 2024-08-11 16:55 GMT

கிருஷ்ணகிரியில் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் காட்டு வீர ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இதன் அருகில் தேசிய நெடுஞ்சாலையையொட்டி ஏராளமான குப்பைகள் நாள்தோறும் கொட்டப்படுகின்றன. இதனால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. நாள்தோறும் இரவு நேரங்களில் பலரும் வாகனங்களில் வந்து இந்த இடத்தில் குப்பைகளை கொட்டி செல்கிறார்கள். எனவே தேசிய நெடுஞ்சாலையோரத்தில் குப்பைகளை கொட்டாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அய்யப்பன், ராயக்கோட்டை.

மேலும் செய்திகள்