குப்பைகள் அகற்றப்படுமா?

Update: 2024-08-11 11:32 GMT

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி, காமராஜர் நகர் பகுதியில் உள்ள நசரத் மேல்நிலைப் பள்ளி அருகே ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றர். இந்த பகுதியில் குப்பைகள் கொட்டப்படுவதால் பயங்கர துர்நாற்றம் வீசுவதுடன், கொசு தொல்லையும் அதிகரித்துள்ளது. மழை காலங்களில் நிலை இன்னும் மோசமாகி விடுகிறது. மேலும் புதர் போல் செடிகள் வளர்ந்து இருப்பதால் விஷப்பூச்சிகள் வீட்டுக்குள் வரும் அபாயமும் உள்ளது. எனவே, மாநகராட்சி அதிகாரிகள் குப்பைகளை அகற்ற உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்