குப்பை தொட்டிகள் அமைக்கலாமே!

Update: 2024-08-04 16:52 GMT

தர்மபுரி இலக்கியம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட வி.பி.சிங் தெரு, டி.ஏ.எம்.எஸ்.காலனி உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியில் தூய்மை பணியாளர்கள் அவ்வப்போது வீடுகளில் குப்பைகளை சேகரித்து செல்கிறார்கள். இருந்தபோதிலும் பொது இடங்கள் மற்றும் சாலையோர பகுதிகளில் ஆங்காங்கே குப்பைகள் கொட்டப்படுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே இந்த பகுதிகளில் அதிக குப்பைகள் சேரும் இடங்களில் குப்பை தொட்டிகள் அமைத்து அங்கு சேரும் குப்பைகளை அவ்வப்போது அகற்றி சுற்றுப்புற சுகாதாரத்தை உறுதி செய்ய சம்பந்தப்பட்ட துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்