தொற்று நோய் பரவும் அபாயம்

Update: 2024-08-04 12:39 GMT

தஞ்சை மானோஜிப்பட்டியில் உள்ள உப்பரிகை மண்டபம் அருகே சாலையோரத்தில் குப்பைகள் கொட்டப்படுகிறது. குவிந்து கிடக்கும் குப்பைகளை சிலர் அவ்வப்போது தீயிட்டு எரித்து செல்கின்றனர். இதனால் வெளியேறும் புகை மூட்டம் உப்பரிகை மண்டபத்தையும், சாலையையும் சூழ்ந்து கொள்கிறது. இதன்காரணமாக அந்த வழியாக பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரடத்துடன் சென்று வருகின்றனர். புகை மூட்டத்தால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இனிவரும் காலங்களில் மேற்கண்ட பகுதியில் குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்