சுகாதார சீர்கேடு

Update: 2024-08-04 12:38 GMT

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை டவுன் தலையாரி தெரு உள்ளது. இந்த தெருவில் உள்ள ஆஸ்பத்திரியின் அருகே உள்ள சாலையோரத்தில் குப்பைகள் கொட்டப்படுகின்றன. அவ்வப்போது மர்மநபர்கள் குப்பைகளுக்கு தீ வைத்து செல்கின்றனர். தீயில் இருந்து வெளியேறும் புகை மூட்டத்தால் அந்த வழியாக செல்பவர்கள், ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு வருபவர்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதன்காரணமாக அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குப்பைகளை அகற்றவும், குப்பைகளை கொட்டுவதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்