பராமரிப்பு தேவை

Update: 2024-07-28 08:05 GMT

நாகர்கோவில் அருகே கீழவண்ணன்விளை பகுதியில் அனந்தன்கால்வாய் பாய்கிறது. இந்த கால்வாயில் சிலர் குப்பைகளை வீசுவதால் மதகு பகுதியில் அடிக்கடி கழிவுகள் தேங்கி காணப்படுகிறது. இதனால், அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், தண்ணீரை பயன்படுத்துபவர்களுக்கு ஒவ்வாமை ஏற்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மதகு பகுதியில் தேங்கி கிடக்கும் குப்பைகளை அடிக்கடி அகற்றுவதுடன், மதகு பகுதியை பராமரித்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-வீரசூரபெருமாள், வண்ணான்விளை.

மேலும் செய்திகள்