குவிந்துள்ள குப்பையால் சுகாதார சீா்கேடு

Update: 2024-07-21 16:17 GMT

குவிந்துள்ள குப்பையால் சுகாதார சீா்கேடு

திருப்பூர் புளியமர தோட்டத்தில் இருந்து மணியக்காரம்பாளையம் செல்லும் பாரதி நகர் அருகே குப்பைகள் குவித்து வைக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும் குப்பைகளில் ஏதேனும் உணவு கிடைக்குமா? என நாய்கள் அதிக அளவில் அந்த பகுதியில் சண்டை போட்டு வருகிறது. இதனால் அந்த சாலையில் நாய்களால் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. குவிந்துள்ள குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்று ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளது. எனவே குப்பைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

பிரபு, திருப்பூர்.

----------

மேலும் செய்திகள்