கண்மாய் கரையில் குப்பைகள்

Update: 2024-07-14 16:50 GMT

தேனி அல்லிநகரம் வீரப்பஅய்யனார் கோவில் செல்லும் சாலையோரம் மந்தைகுளம் கண்மாய் உள்ளது. இந்த கண்மாயின் கரைப்பகுதியில் குப்பை கழிவுகளை மர்ம நபர்கள் கொட்டி செல்கின்றனர். இதனால் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதாரக்கேடும் ஏற்பட்டுள்ளது. மேலும் அங்கு கொட்டப்படும் பிளாஸ்டிக் கழிவுகளை ஆடு, மாடுகள் தின்பதால் அவைகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. எனவே கண்மாய் கரை ஓரத்தில் கொட்டிய குப்பைகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்