சுகாதார சீர்கேடு

Update: 2024-07-14 07:10 GMT

அகஸ்தீஸ்வரம் பேரூராட்சி பகுதியில் கவர் குளம் உள்ளது. இந்த குளத்தின் கரையோரமாக பஞ்சாயத்தில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டி தினசரி எரிக்கப்படுகின்றன. இதனால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதால், அருகில் உள்ள குடியிருப்பில் வசிக்கும் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பொதுமக்கள் நலன்கருதி அந்த பகுதிகளில் குப்பைகளை எரிப்பதை தடுத்து மாற்று வழி செய்திட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்