சுகாதார சீர்கேடு

Update: 2024-07-07 18:06 GMT

நாமக்கல்-சேந்தமங்கலம் சாலையில் ரெயில் நிலையம் அமைந்து உள்ளது. இங்கு துறையூர் சாலையில் வசிப்போர் வருவதற்கு ஏதுவாக ரெயில்வே மேம்பாலத்தில் இருந்து கொசவம்பட்டி ஏரிக்கரை வழியாக இணைப்பு சாலை ஒன்று உள்ளது. இந்த சாலையின் இருபுறமும் பொதுமக்கள் கழிவுகளை கொட்டி செல்வதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. துர்நாற்றம் வீசுவதால், வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சாலையோரம் கழிவுகளை கொட்டும் நபர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்