குப்பைகள் அகற்றப்படுமா?

Update: 2024-07-07 13:06 GMT

தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை செர்மாக்கநல்லூர் வழியாக வடக்கு மாங்குடி பைபாஸ் இணைப்பு சாலையின் ஓரத்தில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் மூக்கை மூடிய படி சென்று வருகின்றனர். சாலையின் இருபுறத்திலும் போக்குவரத்துக்கு இடையூறாக கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன. இதன்காரணமாக வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்றவும், கருவேலமரங்களை வெட்டி அகற்றிடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்