வடிகாலில் குவிந்து கிடக்கும் குப்பைகள்

Update: 2024-07-07 13:05 GMT

தஞ்சை மாநகராட்சி 2-வது வார்டு பழைய திருவையாறு சாலை பகுதியில் உள்ள வடிகாலில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் மழைநீர் வடிந்து செல்ல முடியாத நிலை உருவாகி உள்ளது. குவிந்து கிடக்கும் குப்பைகளால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இவற்றால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்