தீ வைத்து எரிக்கப்படும் குப்பைகள்

Update: 2024-06-30 17:01 GMT

ஆத்தூர் அருகே அக்கரைப்பட்டியில் சாலையோரத்தில் கொட்டப்படும் குப்பைகளை மர்மநபர்கள் தீ வைத்து எரிக்கின்றனர். இதனால் அந்த பகுதி முழுவதும் புகைமூட்டம் ஏற்படுவதால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். மேலும் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்களும் பாதிக்கப்படுகின்றனர். எனவே குப்பைகள் கொட்டப்படுவதையும், அவற்றை தீவைத்து எரிப்பதையும் தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்