குப்பை கொட்டுவது தடுக்கப்படுமா?

Update: 2024-06-30 14:04 GMT

செங்கல்பட்டு மாவட்டம், குரோம்பேட்டை கோவிலம்பாக்கம் சாலை அருகில் குப்பைகள் கொட்டப்பட்டுள்ளது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மேலும், அதிக அளவு துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அந்த பகுதி மக்களுக்கு நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சாலையில் குப்பை கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் செய்திகள்